நியூயார்க்: அமெரிக்காவில் நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இருபது வயது இளம்பெண் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். கடந்த வியாழக்கிழமை இரவு கல்லூரி வளாகத்திற்குள் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்த ரேணுகா ராமநாதன் சாலையைக் கடக்க முயற்சி செய்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு பறந்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த ரேணுகாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று 'த நியூ பேப்பர்' வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது.
நியூயார்க் நகரத்திலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஃலோ நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பஃலோவில் சிங்கப்பூரரான ரேணுகா இள நிலை பட்டப்படிப்பு படித்து வரு கிறார். பல்கலைக் கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள ஹாட்லி வில்லேஜ் அடுக்குமாடி வீடு களுக்கு முன்பு ஹாட்லி ரோட்டில் இரவு 10.00 மணி அளவில் விபத்து நிகழ்ந்தது என்று கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித் தது.
உடனே எரி கவுண்டி மருத்துவ மனையில் ரேணுகா சேர்க்கப் பட்டார். விவரம் அறிவதற்காக பெற் றோருடன் நியூபேப்பர் தொடர்பு கொண்டபோது, பெயர் தெரிவிக்க விரும்பாத ரேணுகாவின் தாயார், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக் கிறது என்று மட்டும் கூறினார். மகளின் உடல்நிலை மோச மாக இருப்பதாகவும் இன்னமும் சுயநினைவு திரும்பவில்லை என்றும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார். தற்போது அவர் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருகிறோம் என்று ரேணுகாவின் தாயார் கூறினார்.