இவ்வாண்டிலிருந்து பத்து மில்லியன் வெள்ளி வருமானமுள்ள நிறுவனங்கள் வருமான வரிப் படிவத்தை இணையம் வழி தாக்கல் செய்வது கட்டாயமாக்கப் படும் என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அறிவித்துள் ளது. நிறுவனங்கள் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30. ஆனால் இணையம் வழி டிசம்பர் 15ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் கூறியுள்ளது. இணையம் வழி வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்வது கட்டம் கட்டமாக கட்டாயமாக்கப் பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங் களும் இணையம் வழி வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
வரும் 2020ஆம் ஆண்டில் அனைத்து நிறுவனங்களும் இந்த நிபந்தனைகளுக்கு உட்படுத்தப் படும். இந்நிலையில் இணையம் வழி வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக 'myTax' எனும் இணையத் தளத்தில் 'CorpPass' கணக்கு களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நிறுவனங் களுக்கு ஆணையம் நினைவூட்டி யுள்ளது. ஏற்கெனவே எழுபது விழுக்காடு நிறுவனங்கள் 'CorpPass' கணக்குகளுடன் தயாராகிவிட்டன. இத்தகைய கணக்குகளை உருவாக்காத நிறு வனங்கள் முன்கூட்டியே 'CorpPass' கணக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய ஆணையம், குறிப் பிட்ட காலத்திற்குள் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய இது உதவும் என்று அறிவுறுத் தியது. நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இழப்பீடு, நன் கொடைகள் தொடர்பான சில விவரங்கள் ஏற்கெனவே படிவங் களில் பூர்த்தி செய்யப்பட்டிருக் கும் என்று ஆணையம் கூறியது.