தீபாவளிப் பண்டிகை பல இடங் களிலும் செவ்வாய் அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசி களுக்கு குதூகலமான கொண்டாட் டத்தைக் கொண்டு வந்தனர் இளங்கோவன் புரொடக்ஷன்ஸ். ஆடல், பாடல், நடனம் போன்ற குதூகலமான கொண்டாட்டங் களுடன் தீபாவளி அமைந்தது. மேலும் அங்கிருக்கும் 217 இல்ல வாசிகளுக்கும் அன்பளிப்பு களையும் தொண்டூழியர்கள் வழங்கினர். அப்துல் கலாம் விஷன் சொசைட்டியும் இந்த ஆண்டு தீபாவளியை நவம்பர் 4ஆம் தேதி ஸ்ரீ நாராயணா மிஷனில் தங்கி இருக்கும் முதியோர்களுடன் கொண்டாடியது.
அங்கு தங்கியிருக்கும் அனைத்து முதியவர்களுக்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கிய துடன் சிறப்பு இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் களை மகிழ்விக்கும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்ப ட்டன. 'அப்துல் கலாம் விஷன் சொசைட்டி'யைச் சேர்ந்த 100 தொண்டூழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு முதியோரை மகிழ்ச்சிப் படுத்தினர். வரவேற்புரை வழங்கிய நாராயண மிஷனின் மூத்த நிர்வாக அதிகாரி திரு தேவேந்திரன் அங்கு வசிக்கும் பலர் நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் மிகுந்த வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று கூறினார்.
"முதியோர்களைப் பிரதி நிதிக்கும் இல்லத்தின் துணைத் தலைவர் முன்னாள் மேஜர் திரு ஈஸ்வர் லால்சிங் தன் 12வது வயதில் இந்திய தேசிய ராணுவப் படையின் இளைஞர் பிரிவில் பணியாற்றியவர் என்றும் ஈஸ்வர் என்ற பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சூட்டியது," என்றும் கூறினார். மேலும் சுபாஸ் சந்திரபோஸ் பர்மா சென்றபொழுது அவருடன் செல்ல விரும்பிய திரு லால்சிங்கை அவரின் வயதின் காரணமாக சுபாஷ் சந்திரபோஸ் தடுத்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பலர் இதுபோன்ற பல சாதனைகளைத் தம் இளம் வயதில் புரிந்தவர்கள் என்பதை அனை வருக்கும் தெரியப்படுத்தி அவர்க ளுடன் கொண்டாடும் இந்த தீபாவளி மிகச் சிறப்பு வாய்ந்தது என்றார்.
நகைச்சுவைக் கலைஞர் திரு இளங்கோவன் ராமசாமி, 58, (நீல நிற சட்டை அணிந்து நடுவில் மை வைத்திருப்பவர்) தமது தொண்டூழிய கலைக் குழுவினருடன் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசிகளுக்கு தீபாவளி அன்று கொண்டாட்ட குதூகலத்தைக் கொண்டுவந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்