ஜகார்த்தா: இந்தோனீசிய கடல் பகுதியில் சென்ற வாரம் லயன் ஏர் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங் கியதை அடுத்து அந்த ரக விமானங்களை இயக்கும் நிறு வனங்களுக்கு போயிங் நிறுவனம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்க உள்ளது. விமானத்தின் கண்காணிப்புக் கருவியில் கோளாறு இருந்தால் அந்த விமானம் விழுந்து நொறுங் கக்கூடிய ஆபத்து இருப்பதால் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக புதிய 737 மேக்ஸ் ரக விமானங்களை சேவையில் ஈடுபடுத்தும் நிறு வனங்களுக்கு போயிங் எச்சரிக்கை கடிதம் அனுப்ப உள்ளது. இந்த விஷயம் பற்றி நன்கு அறிந்த ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
விமான கண்காணிப்புக் கருவி யில் சரியான தகவல்களை அறிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த விமானம் வேகமாக விழுந்து நொறுங்கக்கூடிய ஆபத்து உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார். இப்பிரச்சினையை சமாளிக்க தற்போதைய விதிமுறைகளைப் பின்பற்றுமாறு விமானிகளுக்கு போயிங் எச்சரிக்கை விடுக்க உள்ளது. சென்ற வாரம் மொத்தம் 189 பேருடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் ஜேடி 610 எண் விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர். அந்த விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அடிப்படையில் இத்தகைய எச்சரிக்கையை விமானிகளுக்கு போயிங் விடுக்கவுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் என்ஜின் பகுதிகளை புலன் விசாரணையாளர்கள் சோதனை செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி