சான் பிரான்சிஸ்கோ: கலிஃபோர்னி யாவில் உள்ள மதுபானக் கூடத்தில் துப்பாக்கிக்காரன் ஒருவன் சரமாரி யாகச் சுட்டதில் 12 பேர் கொல்லப் பட்டனர். இதில் சார்ஜெண்ட் ஒருவரும் கொல்லப்பட்டார். சம்பவத்தில் துப்பாக்கிக்காரனும் இறந்துவிட்டதாக வென்சுரா கவுன்டி யின் ஷெரிஃப் சார்ஜெண்ட் எரிக் பஷோவ் தெரிவித்தார். "பயங்கரக் காட்சியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ரத்தம்," என்று ஷெரிஃப் ஜியோஃப் டீன் கூறினார்.
புதன் இரவு 'தவுசண்ட் ஓக்' என்ற இடத்தில் உள்ள 'பார்டர்லைன் பார் அண்ட் கிரில்' மதுபானக் கூடத்தில் கூட்டத் தினரை நோக்கி துப்பாக்கிக் காரன் குறைந்தது முப்பது முறை சுட்டிருக்கலாம் என்று போலிசார் கூறினர். கையிலிருந்த துப்பாக்கியால் அவன் பலமுறை சுட்டதாகவும் பின் னர் புகை குண்டுகளை கூட்டத்தினரை நோக்கி அவன் வீசியதாகவும் சம்ப வத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.
இந்த நிலையில் துப்பாக்கிக் காரனை மடக்குவதற்காக சார்ஜெண்ட் ரோன் ஹெலுஸ் கட்டடத்துக்குள் நுழைந்தபோது சுடப்பட்டார் என்றும் காயம் அடைந்த அவர் மருத்துவ மனையில் இறந்துவிட்டார் என்றும் போலிசார் தெரிவித்தனர். துப்பாக்கிக்காரன் எப்படி இறந்தான் என்பது பற்றி அதிகாரிகள் தெரிவிக்க வில்லை. இந்தச் சம்பவத்தில் குறைந் தது பத்து பேர் காயம் அடைந்திருக் கலாம் என்று நம்பப்படுகிறது. துப்பாக்கிக்காரன் சுட்டபோது நூற்றுக்கணக்கானவர் மதுபானக் கூடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.