மூன்று வயது சிறுமியின் வாயில் சிறுவன் ஒருவன் பட்டாசு வைத்து வெடிக்கச் செய்ததில் அச்சிறுமியின் வாய் சிதைந்து போனது. 50 தையல்கள் போடப் பட்டு மோசமான உடல்நிலையில் அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள மில்லக் என்ற கிரா- மத்தில் தீபாவளிக்கு முதல் நாள் இச்சம்பவம் நிகழ்ந்தது. திங்கட்கிழமை இரவு சிறுவர் கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் மூன்று வயது மகளின் வாயில் சிறுவன் ஒருவன் பட்டாசு வைத்துள்ளான். அதிக சத்தத்துடன் வெடிக்கக் கூடிய அந்தப் பட்டாசு சிறுமியில் வாய்க்குள் வெடித்ததில் அவள் கடுமையாகக் காயம் அடைந்தாள். சிறுமி உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட் டாள். அவளது வாய்ப் பகுதியில் தையல்கள் போடப்பட்டன.
தொண்டையிலும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. சிறுமியின் வாயில் பட்டாசு வைத்தது ஹர்பால் என்ற சிறுவன் என போலிஸ் நிலையத்தில் அவளது தந்தை சசிகுமார் புகார் கொடுத்துள்ளார். போலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹர்- பாலைத் தேடி வருகின்றனர்.