மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடுத்தெருவில் ஒருவன், வெறியோடு பலரை ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கிய தால் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயம் அடைந்தனர். மத்திய மெல்பர்னில் போர்க் ஸ்திரீட் அருகே மிகவும் பரபரப் பான கடைத்தொகுதிக்கு முன்பு நேற்று இந்தப் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஒரு கார் தீப்பற்றி எரிவதாக போலிசாருக்குத் தகவல் கிடைத் தது. இதையடுத்து சம்பவ இடத் துக்கு வந்த போலிசார், ஒருவன் கத்தியுடன் இருப்பதைக் கண் டனர். உடனே அவன் இரண்டு போலிஸ் அதிகாரிகளை விரட்டி விரட்டி கத்தியால் தாக்க முயற்சி செய்தான். இதற்கிடையே பொது மக்களில் ஒருவர், அவனை நோக்கி டிராலியைத் தள்ளி விட்டார். இதனால் அவன் தடு மாறிய போது போலிசார் அவனை நோக்கி சுட்டனர்.
இதில் காயம் அடைந்த அந்த ஆசாமி மோசமான உடல் நிலை யில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக பின்னர் விக்டோரியா போலிசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் கத்தியால் குத்தப்பட்டதால் படுகாயம் அடைந்த வழிப்போக்கர் ஒருவர் மரணமடைந்தார். காயம் அடைந்த மற்ற மூவருக்கு சம்பவ இடத்தி லேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே வெடிகுண்டு நிபுணர்கள், அப்பகுதியைச் சுற்றி வளைத்து பாதுகாப்பை வலுப்படுத் தினர். அதே சமயத்தில் டிரக் ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந் ததை தீ அணைப்பாளர்கள் அணைத்தனர். காரின் உள்ளே ஏதோ ஒரு பொருளை அவன் வீசியதாகவும் இதனால் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. கத்தி ஆசாமியின் உள்நோக்கம் பற்றி உடனடியாகத் தெரியவில்லை.