வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு எல்லையோரம் அமெரிக் காவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேறிகள் இனி புதிய விதிமுறையின் கீழ் அகதி களாகக் கருதப்படமாட்டார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித் துள்ளது. இந்த விதிமுறையின் கீழ் அதிபரின் கட்டுப்பாடுகளை மீறி நுழைபவர்கள் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அது மேலும் விளக்கம் அளித்துள்ளது. நாட்டு நலன்களை கருத்தில் கொண்டு குடியேறிகளை அதிபர் மறுக்க முடியும் என்றும் டிரம்ப் நிர்வாகத்தின் அறிக்கை குறிப் பிட்டது. ஆனால் இந்த நடவ டிக்கை சட்டவிரோதமானது என்ற குறை கூறல்கள் எழுந்து உள்ளன.
அண்மைய தேர்தல் கூட்டங் களில் குடியேறிகளின் பிரச்சினை களை முன் வைத்து அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு சாதமாக அமையவில்லை. மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடி யேறிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் எல்லையில் துருப்பு களை நிறுத்தியுள்ள அதிபர் டிரம்ப் அவர்களை தடுத்து வரு கிறார். குடியேறிகளை 'ஊடுருவல் காரர்கள்' என்றும் அவர் வரு ணித்துள்ளார்.