கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ: பல வீடுகள் நாசம், 9 பேர் பலி

லாஸ் ஏஞ்சலிஸ்: தென் கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத் தீயில் பல வீடுகள் நாசமானதாகவும் இந்தத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவ தாகவும் அதிகாரிகள் கூறினர். கடும் வறட்சி காரணமாக பரவும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வரு கின்றனர். ஹெலிகாப்டர் உதவியு யுடன் காட்டுத் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேகமாகப் பரவும் காட்டுத் தீயில் மலிபு கடற்கரை விடுதி முற்றாக நாசமானதாகவும் அப் பகுதியில் உள்ள பல கட்டடங்களில் பற்றிக்கொண்ட தீ தொடர்ந்து எரிவதால் அப்பகுதியில் வசிக் கும் குடியிருப்பாளர்கள் அவசர மாக வெளியேறி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்பகுதிக்குச் சற்று வடக்கே பெரிய அளவில் பரவும் காட்டுத் தீ பேரடைஸ் நகரை மொத்தமாக அழித்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இங்கு மட்டும் 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும் இன்னும் 35 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. கலிஃபோர்னியா மாநிலத்தில் மூன்று இடங்களில் மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. வடக்கிலும் தெற்கிலும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இப்பகுதிகளில் இருந்து 250,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கலிஃபோர்னியா, மலிபு பகுதியில் பரவும் காட்டுத் தீயில் பல வீடுகள் நாசமாகின. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!