திரைப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்ட படைப்புகள் வாயிலாகத் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கவியரசு கண்ணதாசனை நினைவுகூரும் வகையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் அவர் பெயரில் விழா நடத்தி வருகிறது. அந்த வகையில் 20வது ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா பல்வேறு அங்கங்களுடன் வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை மணி 5.30க்கு தேங் ரோட்டு அருள்மிகு தெண்டாயுத பாணி கோயில் மண்டபத்தில் நடைபெறும்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் மன்றத்தின் தலைவரும் மாடர்ன் மாண்டிசோரி இன்டர்நேஷ னலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் த.சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். திரைப்பட ஒளிப்பதிவாளரும் நடிகரும் கவியரசு கண்ணதாச னின் மகனுமாகிய திரு. கோபி கண்ணதாசன் 'கவிஞர் வாழ்வும் அவர் தம் பாடல்களும்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியின் இறுதிச் சுற்றும் அன் றைய தினம் நடைபெறும். மேலும் 40 வயதிற்குக் கீழ்ப்பட்ட ஒருவ ருக்கு இவ்விழாவில் கண்ணதாசன் விருது வழங்கப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.