பெனி: காங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா கிருமி பரவியதில் 200க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும் பாலானோர் பெனி நகரத்தை சேர்ந்தவர்கள். மொத்தம் 800,000 பேர் வசிக்கும் இந்த நகரம் வட கிவு பகுதியில் அமைந்துள்ளது என்று தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை சுமார் 25,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள் ளது.
இந்த சூழலிலும், காங்கோ குடியரசில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் மருத்துவ குழுக்களை தொடர்ந்து தாக்கு வதாக சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் தடுப்பூசி போடச் சென்ற மருத்துவக் குழுவினரை கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பல மணி நேரமாக தாக்கியதைத் தொடர்ந்து பெனி நகரில் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அரசியல் கொந்தளிப்பு மிகுந்த காங்கோவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வரு கிறது. காங்கோவில் கடந்த ஜுலை மாதம் முதல் இந்த இபோலா கிருமி பரவி வருகிறது.
இங்கு 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்து முறை இபோலா கிருமி தாக்கியுள்ளது. கொடிய இபோலா கிருமியை ஒழிக்க தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. இப்போது பரவும் இபோலா கிருமியால் காங்கோவில் 291 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் களில் 201 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இபோலா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணி யாளர்களை ஆயுதக் குழுக்கள் தாக்க வேண்டாம் என காங்கோவில் உள்ள ஐநா அமைதிக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் மருத்துவப் பணியாளர்களுக்கு மிரட்டல்கள் வந்தவண்ணமாக உள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார்.