இந்திய பிரிமியர் லீக், பிக் பாஷ், கரிபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரைப் போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ் தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தான் தனது லீக்கை ஐக்கிய அரபு சிற்றரசு களில் நடத்தி வருகிறது. சொந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டி, பிளே-ஆப்ஸ் போட்டி களை பாகிஸ்தான் தனது மண் ணில் ஏற்று நடத்தி வருகிறது. 2019 கிரிக்கெட் பருவத்தில் பெரும்பாலான ஆட்டங்களை ஏற்று நடத்த அது திட்டமிட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டி வில்லி யர்ஸ் அனைத்துலக போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு அதிக அள வில் ஓய்வு உள்ளது.
இதைத் தொடர்ந்து பாகிஸ் தான் சூப்பர் லீக்கில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித்தும் ஓராண்டு தடை பெற்றுள்ளதால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார். இரண்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் மேலும் பிரபலமடையும். இந்நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் மட்டும்தான் விளையாடுவோம். பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம் என்று இரு ஆட்டக்காரர்களும் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். படங்கள்: இந்திய ஊடகம்