படப்பிடிப்பின்போது தனது தோழியும் சக நாயகியுமான ரெஜினா தன்னை மறந்து தூங்கிவிடுவார் என்கிறார் சஞ்சிதா ஷெட்டி. இவ்விரு நாயகிகளும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பார்ட்டி' படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மூன்றாவது நாயகியாக நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் இப்படம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சஞ்சிதா. "ரெஜினா மிகவும் வெளிப்படையான நடிகை. படப்பிடிப்பின்போது தூக்கம் வந்தால் கொஞ்சம்கூட தயங்கமாட்டார். அங்குள்ள ஏதேனும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிடுவார். "அதிலும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி செய்தேன், முடியவில்லை. ஒரு விருந்து நிகழ்ச்சியில்தான் இயக்குநர் வெங்கட் பிரபுவை சந்தித்தேன். அப்போது என் நடிப்பை பாராட்டியவர் உடனடியாக வாய்ப்பு தந்துள்ளார்," என்று சிரிக்கிறார் சஞ்சிதா.
படப்பிடிப்பின்போது தூங்கிய ரெஜினா
12 Nov 2018 08:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!