தவறாக பொத்தானை அழுத்திய விமானி

புதுடெல்லி: டெல்லியிலிருந்து கண்டஹார் செல்லும் விமானத்தில் ஆபத்துக் கால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி விளக்கம் அளித்த விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், "விமானத்திலுள்ள "கடத்தல் தடுப்பு' அவசரகால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் தேசிய பாதுகாப்புப் படை உள்பட பல்வேறு அரசு துறைகளுக்கு தகவல் பறந்தது. தேசிய பாதுகாப்புப் படையின் அதிரடி வீரர்கள் அந்த விமானத்தைச் சுற்றி வளைத்தனர்," என்று கூறினர். பின்னர் விமானியின் தவறு என்பது தெரியவந்தது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானம் கண்ட ஹாருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஏரியானா-ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 124 பயணிகளும் 9 ஊழியர்களும் இருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!