காலாங்=பாய லேபார் (கேபிஇ) விரைவுச்சாலையின் ஒரு பகுதி உட்பட சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சனிக்கிழமை சுவா சூ காங், புக்கிட் பாத்தோக் உள்ளிட்ட சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் இதுபோன்ற வெள்ளமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுப் பயனீட்டுக் கழக அதிகாரிகள் இவற்றை விசாரித்து வருகின்றனர்.
சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலைக்கான கேபிஇ துணைச்சாலையிலும் லோரோங் 23 கேலாங்கிலும் வெள்ளம் திடீரென ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக்கழகம் நேற்று பிற்பகல் சுமார் 3.45 மணிக்குத் தெரிவித்தது. பின்னர், 4.20 மணிக்கும் 4.40 மணிக்கும் இடையே வெள்ளநீர் மெல்ல வடியத் தொடங்கியதாக கழகம் கூறியது.