நமது சந்தைகள் எந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்து, வெளிநாட்டு முதலீட்டில் அனைவருக்கும் உகந்த விதிமுறைகள், வர்த்தகச் சூழல்கள் நிலவுகிறதோ அந்த அளவுக்கு அனைவருக்கும் பயன ளிக்கக் கூடிய விளைவுகள் ஏற்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பினாலும், தனது சொந்த உள்நாட்டுச் சந்தை களை வெளிநாட்டுப் போட்டிக்கு திறந்துவிட எண்ணும்போது வர்த்தகங்கள் எப்போதும் அதற்குத் தேவைப்படும் ஆதரவைப் பெறுவ தில்லை.
அப்படி இருக்கும்போது, தங் களைப் பாதுகாத்துக் கொள்ள விதிமுறைகளை அறிமுகப்படுத்த வும் அல்லது தொழில்துறைகளைப் போட்டித் தன்மையிலிருந்து காத்திடவும் நிறுவனங்கள் அரசாங்கத்தை வற்புறுத்தும் என்று விவரித்தார் திரு லீ. "ஆசியானின் ஒருங்கிணைப்பு மற்றும் திறந்த, தொடர்புமிக்க பொருளியல்களால் அனைத்து நாடுகளும் நன்மை அடைந்துள்ளன. அதன் அடிப்படையில் நமது வர்த்தகங்கள் உள்நாட்டுச் சந் தையில் அதிக போட்டித்தன்மை யையும் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பான்மை யைக் கொண்டிருக்க வேண்டும். "அப்போதுதான் ஆசியான் நாடுகள் ஒன்று மற்றதன் சந்தைக் குள் நுழைந்து வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும்," என்று திரு லீ வலியுறுத்தினார்.