காசா: காசா வட்டாரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உள்ளூர் ஹமாஸ் கமாண்டர் உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல், சிறப்புப் படை தயார் நிலையை சோதிக்கும் நடவடிக்கையில் தங்களுடைய ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. காசாவின் தெற்குப் பகுதி யில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காசா பகுதியிலிருந்து ஏவு கணைகள் பாய்ச்சப்பட்டன. இதனால் தெற்கு இஸ்ரேலில் மக்களை எச்சரிக்கும் ஒலி பெருக்கி அலறியதாகத் தெரி விக்கப்பட்டது. சுமார் 17 ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகவும் அவற் றில் மூன்றை வீழ்த்தி விட்டதாகவும் பின்னர் இஸ் ரேலிய ராணுவம் கூறியது. ஆனால் ஏவுகணைகளால் எந்த அளவுக்கு சேதம் ஏற் பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. இந்தச் சூழ்நிலையில் பாரிஸ் நகரில் முதலாம் உலகப் போர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ் சமின் நெட்டன்யாகு தமது பய ணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும் பினார். பின்னர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி னார். இதற்கிடையே இஸ்ரேலின் தாக்குதல் கோழைத்தனமானது என்று ஹமாஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.