சிட்னி: ஆஸ்திரேலியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்ட்ரா பெரி பழங்களில் தையல் ஊசி வைக்கப்பட்ட சம்பவத்தில் முன் னாள் பண்ணை மேற்பார்வை யாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் ஸ்ட்ரா பெரி பழங்களில் ஊசி, குண்டூசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ள முன்னணி பேரங்காடிகளிலிருந்து ஸ்ட்ராபெரி பழங்கள் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டன. இந்த சதித்திட்டத்தால் பழங் களில் கலப்படம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் சிறைத் தண் டனையை அண்மையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் 15 ஆண்டுகளுக்கு உயர்த்தி கடுமையாக் கியது. வடக்கு பிரிஸ்பேனில் உள்ள ஸ்ட்ராபெரி பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்த மை உட் டிரின்ஹ, 50, அங்கு விளைந்த ஸ்ட்ராபெரி பழங்களில் தையல் ஊசிகளை வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து குவீன்ஸ்லாந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தப் பட்ட அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். செப்டம்பர் முற்பகுதியில் தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தை பழிவாங்கும் நோக்கத்தில் ஸ்ட்ரா பெரி பழங்களில் அவர் ஊசியை குத்தி வைத்ததாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திலிருந்து ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசியிருப்பதாக 186 புகார்கள் வந்துள்ளன என்று போலிசார் தெரிவித்தனர். குவீன்ஸ்லாந்தில் நடந்த முதல் சம்பவத்தில் ஸ்ட்ராபெரி சாப்பிட்டு வயிற்றுவலி ஏற்பட்டதால் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தை காவல் துறையினர் இதுவரை வெளியிடவில்லை.