திருச்சி: தமிழகம் முழுவதும் ஊரக மருத்துவப் பணிகள் துறை யின் சார்பில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கி காய்ச்சல், பன்றிகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் குழு வினர் ஆய்வில் ஈடுபட்டனர். கீதாஞ்சலி மருத்துவனையில் ஆய்வு செய்தபோது அங்கு டெங்கிக் கொசு உற்பத்திக்கான காரணிகள் கண்டறியப்பட்டன.
மேலும் மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரிக்காமல் கையாண்டிருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக மருத் துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். நோயாளிகள் நோயைக் குணமாக்க மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில் மருத்துவ மனையே டெங்கிக் கொசு உற்பத்தி காரணிகளை அழிக்காததோடு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.