சென்னை: சென்னையில் இருந்து 740 கி.மீ. தொலைவில் உருவாகி யுள்ள கஜா புயல் மிகக் கடுமை யான புயலாக இருக்கும் என்றும் இது வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை செய்துள்ளது. கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வருவதை ஒட்டி தமிழ கத்திற்கு 'சிவப்பு எச்சரிக்கை' சமிக்ஞை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வரும் இந்தக் கஜா புயல் காரணமாக சுமார் 4,400 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கூடுதல் எச்ச ரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள படகுகளும் பேரிடர் மீட்புக் குழுவினரும் இப்போது முதலே தயார்நிலையில் இருந்து வருகின்றனர்.
கஜா புயல் எதிரொலி கார ணமாக பாம்பன் துறைமுகத்தில் 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறும் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள் ளத் தயார் நிலையில் இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் வரு வாய்த்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான இந்த கஜா புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங் களில் நாளை 14ஆம் தேதி இரவு முதல் 15ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் பேய்மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. "புயலால் தமிழகத்தில் 4,400 இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி களில் உள்ள தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் தலைமை யில் குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன.