$2.9 பில்லியன் நன்கொடை பெற்றுள்ள அறநிறுவனங்கள்

சிங்கப்பூரில் உள்ள அறநிறுவனங் கள் 2016ஆம் ஆண்டில் $2.9 பில்லியன் நன்கொடை பெற்றதாக நேற்று வெளியிடப்பட்ட அற நிறுவன ஆணையத்தின் 2017 வருடாந்தர அறிக்கை தெரிவித்து உள்ளது. இத்தொகையே ஐந் தாண்டுகளில் ஆக அதிகமானது. இத்தொகையில் தேவாலயங் கள், கோவில்கள் போன்ற சமயம் சார்ந்த குழுக்கள் $1.1 பில் லியனுக்குக் கணக்கு காட்டிய தாகவும் எஞ்சிய நன்கொடைகள் கல்வி, சமூகம், சுகாதாரம் முதலிய துறைகளுக்குப் பயன் படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. 2016ஆம் ஆண்டில் கிடைத்த மொத்த நன்கொடைத் தொகை 2015இல் பெறப்பட்ட $2.7 பில்லியனைவிட ஐந்து விழுக்காடு அதிகம். பதிவுசெய்யப்பட்ட அறநிறு வனங்கள் சென்றாண்டு மொத் தம் 2,263ஆக இருந்தன.

இவற்றில் 39 அறநிறுவனங்கள் புதி தாக இணைந்தவை. அத்துடன் அறநிறுவனங்களில் பாதி எண்ணிக்கை சிறிய அள வில் இயங்குபவை. அவற்றிற் குக் கிடைக்கும் வருமானம் $250,000க்கும் குறைவே. அறநிறுவன ஆணையம் கடந்த ஆண்டில் நன்கொடைத் துறையை மேம்படுத்தும் பொருட்டு வெவ்வேறு திட்டங்களையும் தொடங்கியது. பெறப்படும் நிதிகள் அனைத்திற்கும் முறையே கணக்கு காட்டப்படவேண்டும் என்பதையும் ஆணையம் உறுதி செய்து வருகிறது. இதன் தொடர்பில் "இன்றைய மாறும் சூழலில், அறநிறுவனங்கள் நல்ல ஆட்சிமுறையுடனும் பொறுப் புடனும் இயங்க நாங்கள் அதி காரம் அளிக்க விரும்புகிறோம்,'' என்று அறநிறுவன ஆணையாளர் டாக்டர் அங் ஹக் செங் அறிக்கைவழி கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!