இளையர்கள் தவறான பாதைக்குச்செல்லாமல் இருக்க, விளையாட்டு களில் ஈடுபடுவது ஒரு சிறந்த மாற்று வழியாகக் கருதப்படுகிறது. வெளியுறவு அமைச்சின் முன்னாள் மூத்த துணை அமைச்ச ரான அமரர் டாக்டர் பாலாஜி சதாசிவனின் இந்த நோக்கத்துடன் அவரது நினைவில் 'டாக்டர் பாலாஜி சதாசிவன் ஃபுட்சால் ஃபைவ்ஸ்' காற்பந்துப் போட்டி தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் துவங்கிய இப்போட்டி இந்திய இளையர்களை அதிகம் ஈர்த்தது. தொடர்ந்து சமூகத்தினரிடையே மேலும் பிரபல மாகி இருப்பதன் விளைவாக இவ் வாண்டு 8வது முறையாக இப் போட்டி நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 400 போட்டியாளர் கள் இம்முறை இதில் கலந்துகொள் வர். 21 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் (ஆண்கள் பிரிவு), 35 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் (ஆண்கள் பிரிவு), 16 வயதிலிருந்து 49 வய துக்கும் உட்பட்டவர்கள் (பெண் கள் பிரிவு), 35 வயதிலிருந்து 49 வயதுக்கு உட்பட்டவர்கள் (ஆண்கள் பிரிவு) என நான்கு பிரிவுகளில் இம்முறை இப்போட்டி விரிவாக்கம் கண்டுள்ளது. "மற்ற வயதுப் பிரிவினரும் தொடர்ந்து ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வர, அவர்களையும் உள்ளடக்கும் வகையில் ஆண்கள், பெண்கள் போட்டி பிரிவுகளின் வயது வரம்பை அதிகரித்துள்ளோம்.
"சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார் இப் போட்டியை ஏற்பாடு செய்யும் மக் கள் கழக நற்பணிப் பேரவையின் இளையர் அணியில் இடம்பெற் றுள்ள திரு அனிஷ் மயூரன், 28. வெற்றியாளர்களுக்கு அதிக பட்சமாக $1,000 வரையிலான பரிசுத் தொகையும் வெற்றிப் பதக்கங்களும் காத்திருக்கின்றன.
கோவன் விளையாட்டு மையத்தில் டிசம்பர் 15ஆம் தேதியன்று இந்த விறுவிறுப்பான 'ஃபுட்சால்' காற்பந்துப் போட்டியில் குழுக்கள் களமிறங்கவுள்ளன. போட்டிக்குப் பதிவு செய்வதற்கான இறுதி நாள் வரும் டிசம்பர் 2ஆம் தேதி. இப்போட்டி தொடர்பான மேல் விவரங்களுக்கு, https://www. facebook.com/NarpaniPeara vaiYouth எனும் 'ஃபேஸ்புக்' பக் கத்தை நாடலாம்.