மருத்துவர் வேடிக்கை பார்க்க காயத்தில் தையல் போட்ட ஊழியர்; மக்கள் அதிர்ச்சி

அரியானா: அரியானா அரசு மருத் துவமனைக்கு விபத்தில் சிக்கிய ஒருவரை காயத்துடன் அழைத்து வந்தபோது, அந்த மருத்துவ மனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே அவரது காயத்தில் மருந்து வைத்து, தையல் போட்டு விடும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அரியானாவில் உள்ள ரோத்தக் அரசு மருத்துவமனைக்கு விபத் தில் காயமடைந்த ஒருவர் அழைத்து வரப்பட்டார்.

வலியில் துடித்துக்கொண் டிருந்த தனக்கு வலி நிவாரணி மருந்துகள் எதுவும் வழங்கப்பட வில்லை என்றும் மருத்துவர் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்க ஊழியர் ஒருவர் தையல் போட்டுவிட்டதாகவும் காயம் அடைந்த ஜோஹிந்தர் குமார் குற்றம்சாட்டியுள்ளார். "ஐந்தாம் வகுப்பு படித்த காக்கி சீருடையில் இருந்த ஆடவரை ரத்தம் சொட்டும் காயத்தில் தையல் போடச் சொன்ன டாக்டர் அதை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்," என்றார். என்னுடன் வந்திருந்த என் நண்பன் இதைக் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டுள்ளான். அரசாங்க மருத்துவமனையின் நிலைமை இதுதான் என்று ஜோஹிந்தர் குமார் கூறியுள்ளார்.

மருத்துவர் வேடிக்கை பார்க்க காயத்தில் தையல் போடும் ஊழியர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!