சிங்கப்பூரும் கனடாவும் இணையப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர் பிலான ஈராண்டு புரிந்துணர்வு குறிப்பின்மீது கையெழுத் திட்டன. சிங்கப்பூரின் இணைய பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டேவிட் கோவும் சிங்கப்பூருக்கான கனடாவின் தூதர் திருவாட்டி லின் மெக்டோனல்டும் கையெழுத் திட்டனர். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இதன் கையெழுத்தைப் பார்வையிட்டனர். இணைய தாக்குதல், இணைய மிரட்டல் ஆகியவற்றின் தொடர்பான தகவல் பரிமாற்றம்,
மனிதவள மேம்பாடு தொடர்பான சிறப்பு நடைமுறைகளைப் பகிர் தல், தொழில்நுட்ப, சான்றிதழ் சேவைகளை வழங்குதல், இணைய பாதுகாப்பு தரநிலை களை மேம்படுத்துதல், வட்டார இணைய பாதுகாப்பை மேம்படுத்துதல் தொடர்பான வட்டார அளவிலான ஒத்துழைப்பு ஆகி யவை இந்தப் புரிந்துணர்வு குறிப்பில் அடங்கி யுள்ளன. நாளடைவில் மேலும் கடுமையாகி வரும் இணைய சூழலைச் சமாளிக்க வலுவான அனைத்துலக பங்காளித்துவங்கள் தொடர்ந்து முக்கிய இடத்தை வகிப்பதாக திரு கோ தெரி வித்தார்.
"இரு நாடுகளிலும் உள்ள இணையப் பாதுகாப்பு சூழலை இந்த குறிப்பு வலுப்படுத்தும். வட்டார அளவிலான இணைய பாதுகாப்பு முயற்சிகளின் தொடர் பில் ஒன்றாக பணியாற்றுவது குறித்து நாங்கள் மகிழ்கிறோம்," என்றார் திரு கோ.