அயர்லாந்துடன் இன்று மோதும் இந்திய மகளிர் கிண்ண கிரிக்கெட் போட்டி

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமை யிலான இந்திய அணி இந்தப் போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்று விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ் தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறது. பந்தடிப்பு மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் இரண்டு ஆட்டங்களில் 117 ஓட்டங்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராகச் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

பந்துவீச்சில் பூனம் யாதவ், ஹேமலதா தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். அயர்லாந்து அணி தான் களமிறங்கிய இரண்டு ஆட்டங் களிலும் தோல்வி அடைந் துள்ளது. 'ஹாட்ரிக்' தோல்வியைத் தவிர்க்க அந்த அணி கடுமை யாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை. இன்று நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோது கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!