லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரிட்டன் ஓர் உடன்பாடு செய்து கொண் டுள்ளது. அந்த நகல் உடன்பாட்டிற்கு பிரிட்டிஷ் அமைச்சரவையில் போதிய ஆதரவு இருந்தால் மட்டுமே அந்த உடன்பாடு நடைமுறைக்கு வரும். ஐரோப்பிய ஒன்றிய அமைப்பி லிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் திருவாட்டி மே சிரமப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உடன்பாடு கண்டுள்ளார். ஆனால் இந்த உடன்பாட்டிற்கு பிரிட்டனில் எதிர்ப்பு இருந்து வருகிறது.
இந்த உடன்பாட்டை நிராகரிக்க வேண்டும் என்று மூத்த உறுப்பினர்களும் பிரிட்டன் வெளியேறுவதை விரும்பாத வர்களும் வலியுறுத்தி வருகின் றனர். ஐரோப்பிய ஒன்றி யத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான பிரிட்டனின் வர்த்தகத் தொடர்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டனும் பிரசல்ஸில் நடந்த கூட்டத்தில் இணக்கம் கண்டன.
அந்த உடன்பாடு குறித்து திருவாட்டி மே, அமைச்சர் களுக்கும் நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கும் விளக்கம் அளிக்கவுள்ளார். சிங்கப்பூர் நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு பிரிட்டிஷ் அமைச்சரவைக் கூட்டம் கூட விருந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மே சிக்கலை எதிர் நோக்கக்கூடும் என்று முன்ன தாகக் கூறப்பட்டது. இருப்பினும் இதுபற்றிய அறிவிப்பு இன்று தெரியவரும். இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்தின் இதர 27 நாடுகளின் தூதர்கள் அந்த உடன்பாடு குறித்து விவாதிப்பர் என்று கூறப்படுகிறது.