காஜல் அகர்வால் 'கவச்சம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி விழாவில் காஜல் கலந்துகொண்டு படக்குழுவினர் பற்றி பாராட்டிப் பேசினார். முதலில் படத்தின் இயக்குநர் மெஹ்ரீன் பற்றி பேசினார். பின்னர் படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடுவைப் பாராட்டினார். சோட்டாவின் பெயரைச் சொன்னதும் விறுவிறுவென்று மேடைக்கு ஏறிய சோட்டா காஜலைக் கட்டிப்பிடித்து பளிச்சென்று காஜலின் கன்னத்தில் முத்தமிட்டார்.
ஒரு நொடி அதிர்ச்சியான காஜல் மேடையில் பிரச்சினை செய்யக்கூடாது என்று தன்னைச் சுதாரித்துக்கொண்டு ஒன்றுமே நடக்காததுபோல் பேச்சைத் தொடர்ந்தார். சோட்டாவின் செயலைப் பார்த்து படத்தின் நாயகனும் இயக்குநர் மெஹ்ரீனும் அதிர்ச்சி அடைந்தனர். முத்தம் கொடுத்த பிறகு அதற்குக்குரிய காரணத்தையும் கூறினார் சோட்டா. அதைக்கேட்டு இசையமைப்பாளர் தமன் வம்பில் மாட்டினார். அதாவது "காஜலுக்கு நாம் யாரும் எளிதில் முத்தம் கொடுக்கமுடியாது என்று தமன் சொன்னார். ஏன் முடியாது என்று நினைத்துத்தான் நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன்," என்று விளக்கம் அளித்தது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது.