சோல்: வடகொரியா புதிய நவீன ஆயுதச் சோதனையை வெற்றிகர மாக நடத்தி முடித்துள்ளது என அந்நாட்டு தேசிய செய்தி நிறு வனமான கேசிஎன்ஏ தெரிவித் துள் ளது. நீண்ட காலமாக தயா ரித்து வரப்பட்ட அந்த ஆயுதம் இப்போது வெற்றிகரமாக சோதித் துப் பார்க்கப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்த ஆயுதம் பற்றிய விவரங்கள் எதனையும் அது வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆயுதச் சோதனை அறிவிப்புக்குப் பின்னர் இந்த ஆண்டு முதன்முதலாக வடகொரியா அதிகாரபூர்வ மாக ஆயுதச் சோதனைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள் ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கும் வடகொரியத் தலை வர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சநிலை சந்திப்பு இடம்பெற்றது. அந்தச் சந்திப்புக் குப் பிறகு கொரியத் தீபகற்பத்தில் அணு வாயுத மிரட்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறினார். இப்போது வடகொரியா மீண் டும் ஆயுதச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.