பண்டிகைகளைப் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாட வழி வகுக்கும் நிகழ்வுகள்தான் சமூக மன்ற கொண்டாட்டங்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களில் சிங்கையில் தீபாவளி கொண்டாட் டங்கள் களைகட்டின. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி, ராடின் மாஸ் தனித்தொகுதி குடி யிருப்பாளர்களுக்காக 'ஒளியும் ஒலியும்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தீபாவளிக் கொண்டாட்டம் கடந்த 17ஆம் தேதி ஜங்டத் தொடக்கப் பள்ளி யின் உள் அரங்கத்தில் நடைபெற் றது. இந்திய பாரம்பரிய இசை கருவிகள் சூழ, மங்கள இசை முழங்க விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர் அத்தொகு தியின் அடித்தளத் ஆலோசகர்களான அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்.
சிங்கையில் நடைபெறும் இம்மா திரியான சமூக மன்ற நிகழ்ச்சி களை வெளிநாட்டினர் வியந்து பாராட்டுவதாகவும் இந்நிகழ்ச்சிகள் நம் பல்லின சமுதாயத்திற்கு மேலும் வலு சேர்க்கும் எனவும் வர்த்தக, தொழில் அமைச்சரும் அத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான திரு சான் சுன் சிங் கூறினார்.
முறுக்குப் பிழிந்து பரவசமடைந்த மோல்மீன்=கேர்ன்ஹில் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு மெல்வின் யோங். படம்: பெக் கியோ சமூக மன்றம்