புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டியில் இந்தியா அரைஇறுதியில் படு தோல்வி அடைந்தது. பயிற்சி யாளர் ரமேஷ் பவார் வேண்டு மென்றே தன்னை நீக்கிய தா கவும் பலமுறை அவர் அவ மதித்த தாக வும் 35 வயதான மிதாலி ராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக் கப்பட்ட முடிவு என்று கூறினார்.
மேலும் "பயிற்சி ஆட்டங்களில் மிதாலி அதிரடியாக ஓட்டங்கள் எடுப்பதில் தடுமாறினார். அவரி டம் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய உத்வேகமும் இல்லை," என்பது போன்ற விஷயங்களையும் சுட்டிக் காட்டி அறிக்கை சமர்ப்பித்தார். ரமேஷ் பவாரின் அடுக் கடுக் கான குற்றச்சாட்டுகளால் அதிர்ச் சிக் குள்ளாகி இருக்கும் மிதாலி ராஜ் தனது டுவிட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். "என்னைப் பற்றி தவறாக சித்திரித்து இருப்பதால் வேத னைக்குள்ளாகி இருக்கிறேன். "கிரிக் கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும் நாட்டிற் காக 20 ஆண்டுகள் உழைத்ததும் வீண். இன்று, என் தேசப்பற்றையே சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக் கப்பட்டுள் ளது. என்னுடைய புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள்.
மிதாலி ராஜ். படம்: இணையம் பயிற்சியாளர் ரமேஷ் பவார்.