சிங்கப்பூரில் கடல் மற்றும் கடலோர தொழில்துறையில் வேலை பார்க் கும் 23,000 சிங்கப்பூரர்களின் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத் தும் முயற்சியாக என்டியுசி ஒரு புதிய பயிற்சி செயல்திட்டத்தை நடப்புக்கு கொண்டுவந்துள்ளது. ஊழியர்கள் மற்றும் நிறுவனங் களின் தேர்ச்சிகள் மேம்பட உதவு வது அந்தத் திட்டத்தின் நோக்கம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் உற்பத்தித்திறனை எப்படி பெருக்கமுடியும் என்பதை ஊழியர்களுக்கும் முதலாளிகளுக் கும் படிப்படியாக வழிகாட்டி அந்தத் திட்டம் உதவும் என்று வேலை வாய்ப்பு, வேலை திறன் பயிற்சிக் கழகம் (e2i) தெரிவித்தது.
தேவன் நாயர் வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகத்தில் கடல்துறை வாரம் நேற்று தொடங் கியது. அந்த நிகழ்ச்சியில் உரை யாற்றிய என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், இந்தப் புதிய பயிற்சி செயல்திட்டத்தில் இடம்பெறக்கூடிய நான்கு ஆற்றல் படிநிலைகள், நிறுவனங்களும் ஊழியர்களும் மின்னிலக்கத்தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ள வழிகாட்டும் முன்னேற்ற மைல்கற் களாகத் திகழும் என்றார்.
கடல்துறை வார தொடக்க நிகழ்ச்சியில் காட்சிக்கூடங்களை என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் பார்வையிட்டார். படம்: வேலை வாய்ப்பு, வேலை திறன் பயிற்சிக் கழகம்