அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரின் தற்காலிக நிறுத்தத்தை சிங் கப்பூர் வரவேற்பதாகத் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், பிரெஞ்சு தொலைக்காட்சி ஒளிவழியான 'பிரான்ஸ் 24'க்கு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிரான்சுக்கு அதிகாரபூர்வ பய ணம் மேற்கொண்டுள்ள திரு டியோ, வர்த்தகப் போரின் தற் காலிய நிறுத்தம், வர்த்தக நட வடிக்கைகள் முடங்கிக் கிடந்தி ருந்த நிலையைத் தடுத்து உள்ள தாக கூறினார்.
"இந்த வேளையில் இரு தரப்பினரும், முக்கியமான பிரச்சி னைகளில் சிலவற்றைத் தீர்ப்ப தற்காக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் விரும்பு கிறோம்," என்றும் அவர் சொன்னார். கடந்த சனிக்கிழமை ஜி20 உச்சநிலைக் கூட்டத்திற்கு இடையில், சீனாவும் அமெரிக் காவும் தங்களுக்கு இடையிலான வர்த்தக பதற்றத்தைத் தற்காலிக மாக நிறுத்துவதாக அறிவித்தன. புதிய வர்த்தக வரிகளை விதிப் பதை ஒத்திவைத்து பேச்சுவார்த் தைகளில் இணக்கம் காண மேலும் மூன்று மாதங்களை ஒதுக்க இரண்டு நாடுகளும் சம்மதித்தன.
தமது பயணத்தின்போது பல் வேறு வர்த்தகத் தலைவர்கள், புதிய நிறுவனங்களின் உரிமை யாளர்கள் ஆகியோரைச் சந்தித்த திரு டியோ, இந்த வர்த்தகப் பூசலால் சிங்கப்பூரும் மற்ற பல நாடுகளும் மூன்று விதமான பாதிப்புகளை அடைவதாகத் தெரி வித்தார்.
முதலில் சிங்கப்பூரின் ஏற்று மதிகள் கூடுதல் வர்த்தக வரி களால் பாதிக்கப்படலாம். இரண் டாவதாக, உலக தளவாட அமைப் பில் ஏற்படும் இடையூறுகள் சிங்கப் பூரை பாதிக்கலாம். மூன்றாவதாக, உலகின் ஆக இரண்டு பொருளியல்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசல் களால் அனைத்து நாடுகளுக்கான வர்த்தகங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படலாம் என திரு டியோ தெரிவித்தார். இந்நிலை உலகில் எந்தத் தரப்புக்கும் நன்மை யைத் தரக்கூடியது அல்ல என்றும் திரு டியோ கூறினார்.
சிங்கப்பூரின் துணைப்பிரதமர் டியோ சீ ஹியன் (இடது) 'பிரான்ஸ் 24' தொலைக்காட்சி ஒளிவழியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு