ஹுவாவெய் நிறுவனரின் மகள் கைது

மெங் வான்ஷோவ். கோப்புப் படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: சீனாவில் பிரபல கைத்தொலைபேசி நிறுவனமான ஹுவாவெய்யைத் தோற்று வித்தவரின் மகள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் தடையை மீறி செயல்பட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் அறிந்த வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எத்தகைய மீறல் என்பது பற்றி தெரியவில்லை. ஹுவாவெய்யை நிறுவிய ரென் ஷென்ஃபய்யின் மகளான மெங் வான்ஷோவ் நிறுவனத்தில் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தலைமை நிதி அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். அர்ஜெண்டினாவில் 'ஜி20' மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசிய அதே டிசம்பர் 1ஆம் தேதி மெங் வான்ஷோவ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் இன்று அவர் நிறுத்தப்படுவார் என்று கனடா நீதித் துறையின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!