விபத்தை தடுக்க கருவி கண்டுபிடிப்பு; தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள்

கிருஷ்ணகிரி: பேருந்துகளில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்வதைத் தடுக்கப் புதிய கருவியை வடிவமைத்துள்ள கிருஷ்ணகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் பிரஜனி, சுரேகா ஆகியோர் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றனர் (படம்: ஊடகம்).

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, "பேருந்து படிகளில் நின்றபடி பயணம் செய்வதால் பலர் தவறி கீழே விழுந்து உயிரிழக்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து இயக்கப்படும் போது பயணிகள் படிக்கட்டில் நின்றால் அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். மேலும் படிக்கட்டுகளை ஹைட்ராலிக் முறையில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவியுடன் இணைத் துள்ளதால் படிக்கட்டில் நிற்கும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக பேருந்தின் வேகம் தானாகவே குறையும்.

"இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி படிக்கட்டில் இருப்பவர்களை மேலே வரும்படி எச்சரிப்பார். மேலும் அலா ரம் ஒலிப்பதால் சக பயணிகளும் படிக்கட்டில் நிற்பவர்களை மேலே வரும்படி அழைப்பார்கள். இதனால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்வோர் கீழே விழுந்து இறப்பது தடுக்கப்படும்," என்றனர்.2018-12-08 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!