லால்குடி: திருச்சியில் விவசாயி கள் பெயரில் ரூ.3.50 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் வேளாண்மை கூட் டுறவு வங்கித் தலைவரை கண் டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லால்குடி அருகே உள்ள காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ராமநாத புரம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த 3,900 விவசாயிகள் உறுப்பினர் களாக உள்ளனர். இந்தக் கடன் வங்கியின் தலைவராக சாலை சுந்தரம் கடந்த முறை பதவி வகித்துள்ளார். இவர் அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காட்டூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் ஒவ்வொருவரும் ரூ.98,863 வீதம் 300க்கும் மேற்பட்டோர் கடன் பெற்றுள்ளதாக அண்மை யில் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன், அவரது அண்ணன் பரமசிவம் ஆகியோர் பெயரிலும் சாலைசுந்தரம் கடன் பெற்றிருந்தது தெரியவந்தது.