ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் 67% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு தெலுங்கானா வில் நடைபெற்ற முதல் வாக்குப் பதிவு இது. பூபல்பள்ளி மாவட்டம் பெனு கொலு என்ற மலைக் கிராமம் தெலுங்கானா-சட்டீஷ்கர் மாநில எல்லையில் உள்ளது. மாவோயிஸ் டுகளின் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 16 கி.மீ. தூரத்தில் உள்ள ஜனகலபள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப் பட்டது. வாகன வசதி இல்லாத பெறுகொலு கிராம மக்களில் வயதானவர்கள் சென்ற வியாழக் கிழமையும் மற்றவர்கள் வெள்ளிக் கிழமை காலையிலும் தங்கள் பயணத்தைத் தொடங்கி வாக்குச் சாவடியை அடைந்தனர்.
16 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்களித்த தெலுங்கானா மலைக்கிராமவாசிகள். படம்: தகவல் சாதனம்