சிங்கப்பூருக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அடுத்த ஆண்டு டன் 200 ஆண்டுகளாகின்றன. சிங்கப்பூர் ஃபிரி ஸ்கூல் (Singapore Free School) என அழைக்கப்பட்ட பள்ளியில் 1834ஆம் ஆண்டு முதல் தமிழ் வகுப்பு எல்லா இனத்தினரும் சேர்ந்து கல்வி பயில வாய்ப்பளிக் கும் வகையில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் 200 ஆண்டுகள் தமிழ்க் கல்வியைக் கொண்டாடும் வகையில் பல நிகழ்ச்சிகள் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ளன.
இந்தக் கொண்டாட்டத்தில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க மும் கலந்துகொள்கிறது. அதன் தொடர்பில், நாட்டின் தமிழ்க் கல்வியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இன்றைய நிலையையும் ஆவணப்படுத்தும் முயற்சியை அது எடுக்கிறது. சிங்கப்பூரில் பல தமிழ்த் தொடக்கப்பள்ளிகளும் உமறுப் புலவர் உயர்நிலைப்பள்ளியும் 1980ஆம் ஆண்டு வரை இயங்கி வந்துள்ளன. இப்பள்ளிகள் சார்ந்த குறிப்புகள், பள்ளிக் கட்டடங்களின் புகைப்படங்கள், மாணவர்களின் புகைப்படங்கள், ஆண்டுமலர்கள், இன்னபிற படங்களைச் சங்கம் திரட்டி வருகிறது. அதன் தொடர்பிலான புகைப்படங்கள் இருப்பின் அவற்றை இரவலாகக் கொடுத்து உதவும்படி சங்கம் பொதுமக்க ளிடம் கேட்டுக் கொள்கிறது. தொடர்புக்கு: சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் 10 Jalan Besar, Sim Lim Tower #13-08\09 கைபேசி எண்கள்: 81837540, 96448925, 92231635, 96911946.