எஸ்.வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்
சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்திருந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தன்னைக் காண வந்த ரசிகர் கூட்டத்தைக் கண்டு பேரானந்தத்தில் திழைத்தார். நேற்று முன்தினம் 121, சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் 'மலபார் கோல்ட் & டைமண்ட்' நகைக் கடையைத் திறந்து வைக்க வந்திருந்தார். திறப்பு விழாவிற்கு முன்னதாக 'பார்க் ராயல்' ஹோட்டலில் 'மலபார்' நகைக் கடையின் ஏறத்தாழ 300 சிறப்பு வாடிக்கை யாளர்களைச் சந்தித்து பேசியபோது, "இந்த ஊரைப் பார்க்கும்போது மொத்தமாக ஒரு கூட்டு குடும்பம்போல் தெரிகிறது. ஒரு நாடு தன் மக்களை இவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
"வழக்கமாக ஒருவர் பேசும்போது தன்னைப் பற்றிய விஷயங்களைத்தான் பேசுவார்கள். ஆனால் வரும் வழியில் என் வண்டியை ஒட்டியவர் சிங்கப்பூரைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தார். "பொதுவாக அண்ணன், தம்பி அல்லது அக்கா, தங்கையாக வாழ்வதே கடினம். ஒரு நாட்டில் ஓர் அரசாங்கத்தின் கீழ், கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்கள், பார்க்க அழகாக இருக்கிறது," என்று மகிழ்ச்சியுடன் கூறினார் விஜய் சேதுபதி. அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் களைச் சந்தித்து நகைகள் வாங்கியவர் களுக்கு மேடையில் நகைகளை வழங்கி, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
சிராங்கூன் சாலையில் 121, மலபார் கோல்ட் & டைமண்ட்' நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவருடன் கடை நிர்வாகிகளும் நண்பர்களும் உடன் இருக்கின்றனர். படம்: மலபார் கோல்ட் & டைமண்ட்.