சென்னை: தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரி வித்துள்ளார். இதற்கான முயற்சியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற் கொண்டு வருவதாக சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசுகை யில் அவர் குறிப்பிட்டார். "ஆங்கிலத்திலும் சமசுகிருதத் திலும் உள்ள ஊர்களின் பெயர் களை தமிழில் மாற்றம் செய்ய உள்ளோம். இதற்காக வருவாய்த் துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையினர் உள் ளிட்டோர் இணைந்து பணி யாற்றி வருகிறோம். "ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கு, வைப்பதற்கு அதி காரம் படைத்த அமைப்பு வரு வாய்த்துறை தான்.
இது தொடர் பாக மாவட்ட ஆட்சியர் அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாற்றம் செய்வதற்கான பெயர் களை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள்," என்றார் அமைச்சர் பாண்டியராஜன். பெயர்களை பரிசீலித்த பின் னர், ஆங்கிலத்தில் உள்ள ஊர்க ளின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இரு வாரங்களில் பிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அப் போது 'டிரிப்ளிகேன்' என்பது திருவல்லிக்கேணியாகவும், 'டூட் டிக்குரின்' என்பது தூத்துக்குடி யாகவும் உருமாறும் எனச் சுட்டிக் காட்டினார். இதேபோல தமிழகத்தில் ஆங் கிலத்தில் இருக்கும் 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையே எந்தெந்த ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்பது தொடர் பாக அரசுத் தரப்பில் விரிவான கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், இப்பணி கள் விரைவில் நிறைவடையும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.