ப. பாலசுப்பிரமணியம்
உற்பத்தித் திறன் வளர்ச்சியுடன் புத்தாக்கத் திறனையும் நாம் வளர்க்க வேண்டும். அதற்கு எப்படி ஈடுகொடுத்து திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் கூறினார். வசந்தம் ஒளிவழியில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான 'அமைச்சரைக் கேளுங்கள்' எனும் வரவுசெலவுத் திட்டம் 2016 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்த திரு ஈஸ்வரன் வெளிநாட்டு ஊழியர் களுக்கு சிங்கப்பூரில் இடமில்லை என்று சொல்லிட முடியாது என்றும் அவர்கள் எவ்வாறு உற்பத்தித் திறனுக்கு உதவுகிறார்கள் என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி னார். இவ்வாறு செய்தால் உற்பத்தித் திறன் அடிப்படையில், சிங்கப்பூர் ஊழியர்களும் வெளிநாட்டு ஊழி யர்களும் பயன்பெறுவர், நிறுவனங் களும் வளர முடியும் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
கலந்துரையாடலில் வெளி நாட்டு ஊழியர் தீர்வை கட்டணம் ஏன் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் குறைக்கப்படவில்லை எனும் கேள்வி அமைச்சரிடம் கேட்கப் பட்டது. அதற்கு "பொருளியல் வளர்ச்சிக்கு அடிப்படையானது உற்பத்தித் திறன், அதனை நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும்," என்று கூறிய திரு ஈஸ்வரன், சில துறைகளில் உற்பத்தித் திறனின் பயன்பாடு பின்தங்கி உள்ளது என்றார்.
வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பான 'அமைச்சரைக் கேளுங்கள்' எனும் வரவுசெலவுத் திட்டம் 2016 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (வலமிருந்து இரண்டாவது).