ஜூரோங் தீவில் நேற்று எண் 23 தெம்புசு ரோட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் பிற்பகல் 3 மணிக்கு தீ மூண்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது. அதில் 40 மீட்டர் விட்டம் அளவு, 20 மீட்டர் உயரமுள்ள கச்சா எண்ணெய் இருந்த அந்தக் கிடங்கில் தீ மூண்டதாகக் கூறியது. குடிமைத் தற்காப்புப் படை ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அந்த எண்ணெய்க் கிடங்கு நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. தீயின் கடுமையினால் அந்த எண்ணெய்க் கிடங்கு சரிந்தது. "கடுமையான மழை பெய்து கொண்டிருந்தபோதும் தீப்பிழம்பும் கரும்புகையும் வானத்தை நோக்கிச் செல்வது காண்பதற்கு படுமோசமாக இருந்தது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார் கட்டுமான ஊழியர் ரவி சாமிநாதன்.
ஜூரோங் தீவில் எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது
21 Apr 2016 07:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!