முஹம்மது ஃபைரோஸ்
செல்வச் செழிப்பில் பிறந்து உலகப் பற்றைத் துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பைப் போதிக்கும் சமயங் களில் ஒன்றான பௌத்த சம யத்தை நிறுவிய கௌதம புத்தரின் பிறந்தது, ஞானம் பெற்றது, மறைந்தது ஆகியவற்றை நினைவுகூர்வதுதான் விசாக தினம். இந்நாளில் பௌத்த சமயத்தினர் அவர்களின் பிரார்த்தனைகளை அதிகாலையிலேயே தொடங்குகின்றனர். ஏராளமான பௌத்தர்கள் பௌத்த ஆலயங் களுக்கு இன்று திரளாக வந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.
செயின்ட் மைக்கல்ஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கரா மாயா பௌத்த ஆலயத்தில் இன்று ஏறக்குறைய 5,000 பக்தர் கள் திரள்வர் என்று எதிர்பார்க் கப்படுகிறது. விசாக தினத்தை முன்னிட்டு இவ்வாலயத்தின் தலைமை பௌத்த பிக்கு தவத்திரு கே. ரத்தன நந்தா தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் பௌத்த சமயம் குறித்த தகவல்களுடன் இத்தினத்தன்று கோவிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அதிகாலையில் முதல் வேலையாக பௌத்தக் கொடி ஏற்றப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் புத்தருக்கு பால் சோறு வழங்கி பிரார்த்தனை மேற்கொள்வார்கள்.