மறுவாழ்வு முயற்சிகளைத் தீவிரப்படுத்தி பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் நோயாளிகள் விரைந்து குணமடைவதற்காக 'என்டியுசி ஹெல்த்'தின் ஜூரோங் வெஸ்ட் பராமரிப்பு இல்லத்தில் வழக்கமான சிகிச்சை முறைகளுக்குப் பதிலாக தொழில்நுட்பச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேற்று இந்தப் பராமரிப்பு இல்லம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செயல்படத் தொடங்கிய அந்த இல்லத்தில் தற்போது 200க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிக்கப்படுகின்றனர். மேலும், அந்த வளாகத்துக்குள் ஒரு பகல்நேரப் பராமரிப்பு இல்லமும் இருக் கிறது. 60 முதியோர் அங்கு தின மும் பராமரிக்கப்படுகின்றனர்.
இல்லத்தில் இருக்கும் நோயாளிகள், புவிஈர்ப்பு விசைக்கு எதிரான நடைப் பயிற்சி எந்திரத்தில் நடந்து கால் தசைகளுக்குப் பயிற்சி அளிக்கலாம். இந்த புதுவித 'டிரட்மில்' நடைப்பயிற்சி எந்திரத்தில் நோயாளிகளின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகளைக் காற்றுப் பை ஒன்று சூழ்ந்திருக்கும். இதனால் நோயாளிகளின் எடை அவர்களது கால் எலும்பு மூட்டுகள், தசைகளில் அழுத்தாத வண்ணம் காக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்