சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஒரு பங்கின் விலை $1.68 என்ற கணக்கில் மொத்தம் $1.18 பில்லியனுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தை வாங்கிக்கொள்ள முன் வந்துள்ளது. இதனையடுத்து எஸ்எம்ஆர்டி தனியார்மயமாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் வெற்றி கரமாக இடம்பெறும் பட்சத்தில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உரிமையாவதுடன் சிங்கப்பூர் பங்குசந்தைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிடும்.
தெமாசெக் நிறுவனத்தின் இந்தத் திட்டம் இதர பங்குதாரர்களின் அனுமதியை எதிர்நோக்கி யுள்ளது. நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தப் பங்கு விலை இந்நிறுவனத்தின் கடைசி $1.545 பங்கு விலையைவிட அதிகமானதாகும். எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் 54% தெமாசெக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. எஸ்எம்ஆர்டியின் மதிப்பு கிட்டதட்ட $2.4 பில்லியன். எஸ்எம்ஆர்டி நிறுவனத் திடமிருந்து வடக்கு=தெற்கு, வடக்கு=மேற்கு ரயில் தடங்கள், வட்டப்பாதை ரயில் தடம், புக்கிட் பாஞ்சாங் இலகுரக வழித்தடம் ஆகியவற்றை $1.06 பில்லியன் தொகைக்கு வாங்கிக்கொள்ளப்போவதாக அரசாங்கம் சென்ற வெள்ளிக்கிழமை அறிவிப்பு விடுத்தது.