அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் கட்டற்று பரவும் காட்டுத் தீயை அணைக்க 1,600க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் 41 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையில் போராடி வருகின்றனர். லாஸ் ஏஞ்சலிசுக்கு வடக்கே பல ஆயிரம் ஏக்கர் நிலங் களை விழுங்கிவிட்ட தீயில் நேற்று மாலைக்குள் 18 வீடுகள் அழிந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கணக் கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நெடும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று அதிகாலைக்குள் 13,300 ஹெக்டருக்கு தீ பரவியிருந்தது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த வறட்சியினால் காய்ந்து போயுள்ள நிலப்பரப்பில் காற்றும் வேகமாக வீசுவ தால் தீ கிடுகிடுவென பரவுகிறது.
"ஐந்தாவது ஆண்டாக வறட்சி நிலவுகிறது. அதனால் நெருப்பின் அதிதீவிரமான போக்கை நாங்கள் அனுபவிக்கிறோம்," என்று கூறினார் தீயணைப்புப் பிரிவின் தலைவர் திரு டார்ல் ஒஸ்பி. சாண்டா கிளாரிசாவிலிருந்து 480 கிலோ மீட்டர் வடமேற்கிலுள்ள மொண்டெரியின் கரையோரப் பகுதியில் 10,262 ஹெக்டருக்கு தீ பற்றியிருக்கிறது. அங்கிருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பாளர்கள் கூறினர். சாண்டா கிளாரிசா அருகே வெள்ளிக்கிழமை பகலில் தீ ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் 1,500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறைந்தது 18 வீடுகள் தீயில் கருகி விட்டன என்று லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புப் பிரிவு கூறியது. தீயின் பாதையிலுள்ள கிட்டத்தட்ட 100 வர்த்தகக் கட்டடங்கள் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.
தீயைத் தொடர்ந்து 14 நெடுஞ்சாலைகள் போக்கு வரத்துக்கு மூடப்பட்டுள்ளன என்று கலிஃபோர்னியா நெடுஞ் சாலை சுற்றுக்காவல் படை தெரிவித்தது. கடுமையான வெப்பம், வேகமான காற்று, வறண்ட நிலப்பரப்பு எல்லாமே தீயணைப்பாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்றுக் காலை வரையில் 10 விழுக்காடு தீயையே கட்டுப் படுத்தப்படுத்த முடிந்துள்ள தாக அவர்கள் கூறினர். படத்தில் வேகமாகப் பரவும் தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்கள். படம்: ஏஎஃப்பி