மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணைக் கொலை செய்ததாக பீஷானில் வசிக்கும் தாய், மகள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இல்லத்தரசிகளான காயத்திரி முருகையன், 36, பிரேமா எஸ் நாராயணசாமி, 58, ஆகியோரிடம் குற்ற மறுப்போ, குற்ற ஒப்புதலோ நேற்று பெறப்படவில்லை. இம்மாதம் 25, 26 தேதிகளுக்கு இடைப்பட்ட சமயத்தில் புளோக் 145, பீஷான் ஸ்திரீட் 11ல் உள்ள அவர்களது வீட்டில் பணிபுரிந்து வந்த பியாங் ங்கை டோன், 24, எனும் பணிப்பெண்ணைக் கொலை செய்ததாக காயத்திரி, பிரேமா மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்விருவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்காகக் காவலில் எடுப்பதற்கான அனுமதியுடன் இவ்விருவரையும் மத்திய போலிஸ் பிரிவில் காவலில் வைக்க அரசுத் தரப்பில் கோரப்பட்டது. குற்ற மறுப்போ, குற்ற ஒப்புதலோ பெறப்படுவதற்குத் தயார்நிலையில் இவ்விருவரும் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமது ஃபைசால் கூறினார். இருவர் மீதான குற்றச்சாட்டு கள் நீதிமன்றத்தில் தனித்தனியே தமிழில் வாசிக்கப்பட்டபோது இருவரும் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. இருவரும் எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன் னிலைப்படுத்தப்படுவர்.