இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றுக் காலை துபாய் நோக்கிச் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையில் உரசி நிலை தடுமாறியதாகவும் அதனைத் தொடர்ந்து தீயுடன் கரும்புகை எழுந்ததாகவும் தெரிவிக்கப்பட் டது. இச்சம்பவம் துபாய் அனைத் துலக விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது எமிரேட்ஸ் EK521 என்னும் அந்த விமானத் தில் 282 பயணிகளும் 18 விமான ஊழியர்களும் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் துபாய் அரசாங்க ஊடக அலுவலகம் டுவிட்டர் வாயிலாகத் தெரிவித்தது. பயணிகளில் 24 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
துபாயில் பணியாற்றும் கேரள மாநில ஊழியர்கள் பெரும்பாலும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். நேற்று இந்த விமானத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஓடுபாதை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத் திற்கு மூடப்பட்டதாகவும் தெரிவிக் கப்பட்டது. விமானம் தீப்பற்றிக்கொண்ட தாகவும் அதனால் அந்த போயிங் 777 விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானம் தரை இறங்கியபோது திடீர் என்று அது நிலைதடுமாறக் காரணம் என்ன என்றும் விமானம் தவறுதலாகத் தரை இறக்கப்பட்டதா அல்லது விமான எந்திரத்தில் கோளாறு இருந்ததா என்றும் தீர விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தரை இறங்கிய வேகத்தில் தீப்பற்றியதாகவும் அதனைத் தொடர்ந்து அடர்ந்த கரும்புகை கிளம்பியதாகவும் நம்பப்படுகிறது. படம்: டுவிட்டர்