தெம்பனிஸ் ஸ்திரீட் 92ல் உள்ள கட்டடம் ஒன்றில் பெரிய அளவில் தீப்பற்றியது. அந்த 'CK Building' கட்ட டத்தில் பிற்பகல் 1.30 மணியள வில் பற்றிய தீ கடுமையாகப் பரவி யது. கட்டடத்தினுள் காகிதம் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களும் வாயுக் கரைசல் குடுவைகளும் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது, அதனால் தீயைக் கட்டுப்படுத்துவது தீ அணைப்பாளர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. கட்டடத்தின் மேல் எழும்பிய கரும்புகை பிடோக் நார்த், பே ஷோர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி காலாங் போன்ற தூரப் பகுதியிலும் காணப்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக போராடிய போதும் கட்டடத்தினுள் தீ தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்ததாகவும் தீயணைப்புப் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப் பதாகவும் மாலை 5.50 மணி யளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது 'ஃபேஸ்புக்' செய்தியில் குறிப்பிட்டது. ஐந்து தீயணைப்பு வாகனங் கள், 2 'ரெட் ரைனோ' வாக னங்கள், இரண்டு தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள், 12 ஆத ரவு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டதாகவும் முன் எச்சரிக்கையாக இரண்டு ஆம் புலன்ஸ் வாகனங்கள் வர வழைக்கப்பட்டு இருந்ததாகவும் தற்காப்பு படை தெரிவித்தது.