மேம்பாலச்சாலை டாக்சி- வேன் விபத்தில் நால்வர் காயம்

தோ பாயோ நார்த் மேம்பாலச்சாலை யில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர். அந்த விபத்தில் ஒரு டாக்சியும் ஒரு வேன் வாகனமும் சம்பந்தப்பட்டிருந்தன. தோ பாயோ லோரோங் 6 அருகே அந்த விபத்து நிகழ்ந்தது. அதன் விளைவாக பிராடல் ரோடு நெடுகிலும் அந்த மேம்பாலச் சாலையிலும் போக்குவரத்து அதிக மாகத் தேங்கியது.

தோ பாயோவுக்குச் செல்லும் பல சாலைகளைப் போக்குவரத்துப் போலிஸ் தற்காலிகமாக மூடியது. போக்குவரத்துத் தேக்கத்தில் மாட் டிக்கொண்ட பேருந்துகளிலிருந்து பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்ட தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் கள் தெரிவித்தனர். அந்தச் சம்பவம் பற்றி காலை 8.15 மணிக்குத் தனக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இரண்டு மருத்துவ வாகனங்களை உடனடி யாக அந்தப் படை அனுப்பியது. விபத்தில் காயம் அடைந்த நால்வரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இரு வருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

மற்ற இரண்டு பேரில் ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்ட மாது. மற்றொருவர் 60 வயதுக்கு மேற்பட்ட ஆடவர். தங்களுக்கு முகத்திலும் மார் பிலும் வலிப்பதாக இருவரும் தெரி வித்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் மூவரில் டாக்சி யில் இருந்த இரண்டு பயணிகளும் டாக்சி ஓட்டியும் அடங்குவர்.

மேம்பாலச் சாலையில் ஒரு டாக்சியும் வேன் வாகன மும் விபத்துக் குள்ளானதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!