தெம்பனிஸ் புளோக்குகளில் உள்ள நிழல் மாடங்களின் தன்மை யை உறுதி செய்ய நான்கு புளோக்குகளில் ஊடுகதிர்ச் சோத னையை வீவக தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 23ல் உள்ள புளோக் 210E-யில் நிழல் மாடம் ஒன்று பெயர்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் தொங்கியது. அதனைத் தொடர்ந்து வீவக இந்த ஊடுகதிர்ச் சோதனையை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவத்தில் நல்லவேளையாக யாரும் காயமடையவில்லை. நிழல் மாடம் பெயர்ந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிழல் மாடம் பெயர்ந்தாலும் கட்டடத்தின் கட்டமைப்பு வலுவாக உள்ளதாக வீவக பொறியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 23ல் உள்ள அந்த பாதிக்கப்பட்ட புளோக்கில் உள்ள நிழல் மாடத்தை போன்று டெம்பனிஸ் ஸ்ட்ரீட் 21ல் உள்ள 201A, 201B, 201D ஆகிய புளோக்குகளிலும் உள்ளன. எனவே அந்த புளோக்குகளிலும் ஊடுகதிர்ச் சோதனை செய்யப்படவுள்ளதாக வீவக தெரிவித்துள்ளது. நிழல் மாடத்தின் கான்கிரிட் உறுதித் தன்மையை அறிந்து கொள்வதும் இந்த ஊடுகதிர்ச் சோதனையில் ஓர் அங்கம். இக் கருவி காந்த அலைகளை கான்கிரீட்டுக்குள் ஊடுருவச் செய்து நிழல் மாடத்தினுள் இறுக்கப்பட்டுள்ள கம்பிகளின் தன் மையை அறிய உதவும்.
இச்சோதனை மேற்கொள்வதற்காக சாரம் கட்டப்பட்டு, பாது காப்புத் தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளதாக கழகம் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறன்னு பெயர்ந்து தொங்கிய நிழல் மாடம் கட்டுமான ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள் ளது. ஆய்வுக்கூடச் சோதனை முடிவு, கட்டுமான இடச் சோதனை ஆகியவற்றின் மூலமே நிழல் மாடம் பெயர்ந்ததற்கான காரணத்தை அறிய முடியும் என்று வீவக கூறியது.
வீவக பொறியாளர் ஒருவர் ஸ்ட்ரீட் 23ல் உள்ள புளோக் 201E-யின் நிழல் மாடத்தை ஊடுகதிர் மூலம் சோதனை செய்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்